Latest:
EventsPrograms

நீலகிரி மாவட்டம் கூடலூர் GTMO “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் GTMO (கூடலூர் தாலுகா முஸ்லீம் ஆதரவற்றோர்) மேல்நிலைப் பள்ளியில் 24-02-2024 சனிக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” – பொதுத் தேர்வு பயிற்சி முகாம்!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், தேர்வு பயத்தை போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுதும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். பேராசிரியை Dr.M.ஆரிஷா பைசல் Phd அவர்கள் பெண்கல்வி அவசியம் பற்றி உரையாற்றினார்கள்.

GTMO (கூடலூர் தாலுகா முஸ்லீம் ஆதரவற்றோர்) மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள், கூடலூர் JCI நிர்வாகிகள், Zara Structures நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்