Latest:
EventsPrograms

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் பொதுத் தேர்வு பயிற்சி முகாம் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 25-02-2024 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம் மற்றும் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!

வரவிருக்கும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் வழிமுறைகள், தேர்வு பயத்தை போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுதும் வழிமுறைகள், எளிதில் பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளும் Memory Techniques வழிமுறைகளை விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S.சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது

கிரசன்ட் இஸ்லாமிக் ஸ்கூல் & மதரஸா நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்