Latest:
EventsPrograms

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அரசு மேல் நிலை பள்ளியில் நடந்த மாணவர்களின் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் பொது தேர்வு பயிற்சி முகாம்

புதுமடம் அரசு மேல் நிலை பள்ளியில் நடந்த மாணவர்களின் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் பொது தேர்வு பயிற்சி முகாம்அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அரசு மேல் நிலை பள்ளியில் எளிதில் கணிதம் கற்பது, படிக்கும் பாடத்தை எளிதில் நினைவில் வைத்துகொள்வது, தேர்வு பயத்தை போக்கி மகிழ்சியாக தேர்வு எழுதுவது எப்படி என்ற பயிற்சி 25-02-2019 அன்று Wisdom கல்வி வழிகாட்டி சார்பாக நடைபெற்றது. சகோதரர் S.சித்தீக்.M.Tech அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள், மாணவியர்களுக்கு என இரண்டு அமர்வும், 9,10-ஆம் வகுப்பு மாணவர்கள், மாணவியர்களுக்கு என இரண்டு அமர்வும், மொத்தம் 4 அமர்வுகள், காலை 10:30 முதல் மாலை 5:15 வரை நடைபெற்றது. இந்த நிகழ்சியில் 500 மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.நிகழ்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த புதுமடம் அரசு மேல் நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு (1969/70 batch), புதுமடம் தெற்கு நற்பனி மன்றம், மற்றும் பள்ளி நிர்வாகத்திற்க்கு மனமார்ந்த நன்றிகள்.கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *